தேவதை

விலை மதிப்பற்ற முத்துக்களை ஒளித்து
வைத்திருக்கும் சிப்பிகள் தானோம்மா
உன் கண் இமைகள் ........!

உந்தன் கண்மீன்களை கண்டால்
விண்மீன்களும் பொறாமை கொள்ளுதம்மா...!

பக்குவம் பார்த்து எடுக்க பட்ட
பட்டு நூல் கூட உன் ஒற்றை
தலை முடியிடம் தோற்று நிற்குதம்மா.... !

கிளியின் அழகிய அலகு கூட
உந்தன் நாசி கண்டு..
விலகி நிற்பது ஏனம்மா ....!

ரோஜாவின் செவ்விதழ்களுக்கு
உயிரூட்ட பட்டு...
உன் உதடு ஆனதோம்மா ...!

தாமரை இலையில்
தவம் இருந்து விழுந்த
பனி துளி தனோம்மா
உன் ஒற்றை பரு...!

சுருக்கம் இல்லாத பாலாடை
தானோம்மா
உந்தன் முகம்...!

என்ன புண்ணியம் செய்ததம்மா
இந்த சுவாச காற்று உன்
இதயத்தை நேரடியாய்
தொடுவதற்கு...!

பூலோக சிற்பியால்
உன்னை படைக்க முடியாது
என்று பிரம்மலோக சிற்பி
படைதானோம்மா...!

பிரம்மனே பிரம்மித்து வைத்த
திஸ்டி பொட்டுக்கள்
தனோம்மா உன் மச்சங்கள்..!

பிரம்மாண்டமான பூமி
கூட உன்னை சுமந்து
பாவம் போக்குதம்மா...!

கோர்வையாய் வரும்
உந்தன் வேர்வை தான்
கங்கை அனதோம்மா...!

கர்வம் இல்லாத உன் அழகுக்கு
அழகு சேர்க்க உறவான உந்தன்
புருவம் சொல்லுதம்மா
உன் பூர்வீக அழகை..!

எழுதியவர் : ஜெகன் (21-Dec-13, 8:25 pm)
Tanglish : thevathai
பார்வை : 98

மேலே