என் இப்போதைய ஏக்கம்
என்
கண்களும் /மனங்களும்
எதிர்பார்க்கிறது...
இந்த
அறிவு அலைமோதும்
அன்பு இல்லாத
அலுவலக வாழ்க்கையும்
வேண்டாம்...
படிப்பை
ஒரு கடமையாக
செய்யும் சில
கல்லூரிகளின்
பட்டப் படிப்பும் வேண்டாம் ...
நான்
தவறு செய்தாலும்
தட்டிக் கொடுக்கும்...
தன்
பிள்ளை போல
என்னையும் நினைக்கும்...
ஐந்து
வயதில் இருந்து
பதினேழு வயது வரை....
என்
அறிவுச் சுடரை
அணையாமல்
பார்த்துக் கொண்ட ...
பாசம் கலந்த
அந்தப்
பள்ளி வாழ்க்கை
வேண்டும்...
இந்த
வயதில்
இது சாத்தியமா...?
என்று நினைத்தாலும் ...
மனம்
அந்த இனிய
காலத்தை
நினைத்து
கொஞ்சம் ஏங்க தான் செய்கிறது ...