பட்டுப்போன என் சிட்டு - குமரிபையன்

சின்னஞ்சிறு என் சிட்டுக்களே
சிற்றொலியால் எனை தட்டுங்களே..!
சிறகடித்து எங்கே பறந்தீர்கள்
சீக்கிரம் விரைந்து வாருங்கள்..!

அதிகாலை உங்கள் குரலின்றி
அசைந்து எழும்பமுடியவில்லை..!
உமக்கு உணவு தராமல் - என்
உணவில் சுவையும் தெரியவில்லை..!

உணவை கொத்தும் வேக காட்சி
உன்னிப்பாய் நான் பார்க்கும் மாட்சி..!
உங்கள் அன்பின் சண்டை காட்சி
உள்ளம் அது ரசிக்கும் மாட்சி..!

உரசும் கதிர் கரு கலைத்ததுவோ
உச்சி கோபுரம் உனை தடுத்ததுவோ
அலைபேசி உனை அழித்ததுவோ
அமர விடாமல் உனை விரட்டியதோ..!

பாதைதான் மாறி வேறு பறந்தீரோ
பரலோகம்தான் நீர் சென்றீரோ – என்
இதயதில் நிறைவான பட்டுக்களே
இன்று பட்டுப்போன என் சிட்டுகளே..!

உள்ளங்கையில் உன் உணவிருக்கு
உங்களை காத்து நான் நீட்டுகிறேன்..!
சிறகடித்து பறந்து வருவீரோ - என்
சின்னஞ்சிறு சிட்டு குருவிகளே..!

எழுதியவர் : குமரி பையன் (24-Dec-13, 12:25 pm)
பார்வை : 1692

மேலே