வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்....
காலங்கள் மாறி
கனவுகள் தொலைந்தபோதும்
பாதைகள் மாறி
பயனங்கள் நின்றபோதும்
ஏமாற்றங்கள் எக்காளமிட்டு
ஏக்கங்களை அழைத்தபோதும்
விதவிதமாய் வரைந்துவைத்த நாட்கள்
வெற்றுக்காகிதமானபோதும்
துரோகங்களின் துணையோடு
தூக்கிவிட்ட அவமானங்களிலும்
அரைசான் வயிற்றிற்கு எதுவும் புரியவில்லை
அதனால்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்....