முதிர்ந்த குழந்தை
பிறந்தேன்
இந்த
உலகம் என்னை
வரவேற்றது........!
தொட்டில்
பருவம் என்னை
கொஞ்சிவிளையாட
வைத்தது........!
அன்று எனக்கு
தெரியாத
இன்ப உலகம்......!
கஷ்டங்கள்
கவலைகள்
மறந்த உலகம்.......!
என்றுமே
புதுமைகளை சந்தித்த
அழகிய
அனுபவங்கள்......!
கண்களுக்கு
புதிய விருந்து
அன்னை,
தந்தை,தங்கை
உற்றார் உறவினர்கள்
என் அருகாமையில்......!
பாசத்துடன்
நெருங்கி
இருந்த நேசம்......!
இன்று நான்
காணும் உலகமோ
அமைதியற்ற
மயானம்........!
நான் நிற்கும்
இடம் குழந்தை
பருவத்தின்
காலங்களோ
ஒரு பிரமிப்பு.......!
குழந்தை
பருவம் வந்து
விட்டதா....!
இல்லை இது
முதுமையில் கிடைக்கும்
வறுமை கோலம்...!
உற்றார்
உறவினர்கள் வயது
முதிர்ந்த குழந்தையை
தூக்கி எறிந்த
துரோகம்.........!
நீ பெற்றது
குற்றமா நீ வளர்த்தது
குற்றமா...!
காலம்
என்னை கண்கொண்டு
நகைகிறது......!
இந்த உறவுகள்
என்னை கண்கொண்டு
சிரிக்கிறது......!
தற்போது யாரும்
அற்ற
அனாதையாக......!
அநாதை
ஆசிரமம் அருகில்
ஆதரவை
நாடி......!
ஏங்கி நிற்கும்
ஒரு வயது
முதிர்ந்த குழந்தை.......!