மூன்றாம் பால்–கே-எஸ்-கலை

நெளிந்து வளைந்து
நின்றுக் கொண்டிருந்த
மெழுகு...

கருப்பு தாளில்
மஞ்சள் கதை
எழுதிக்கொண்டிருகிறது...

அந்தக் கதையில்....

ரேகைகள்
பரஸ்பரம் இடம்மாறி
ஆதியையோ
அந்தத்தையோ தேட...

சந்தம் பிறழ்ந்த
சங்கீதம்
சொந்தம் கொண்டாடுகிறது
ஐந்தடி மூன்றங்குல
வீணையில் !

பக்கங்களின்
இடைநடுவில் பற்பல
நவீன ஓவியங்கள்...

கருப்பு தாளில்
கருப்பு மையாலேயே
வரையப் பட்டிருந்தது...

அத்தனைச் சித்திரங்களும்
டாவின்சியை
தோற்கடித்திருந்தது......

எழுதியவர் : கே.எஸ்.கலை (4-Jan-14, 8:02 pm)
பார்வை : 177

மேலே