இயற்கையே

நீரில் அடித்துச்செல்லப்படுகிறது,
நீந்தவும் நீராடவும் போகும்,
எங்களின் சொந்த உயிர்கள் !
சீற்றத்தின் காரனங்கலெல்லாம்,
தீர்க்கமாய் உணராத பிறவிகள் நாங்கள் !
உம்மை எதிர்க்கவும் வெறுக்கவும் இயலாத,
நாங்கள் எப்படி இலக்காகிப்போனோம்?
நம்பிவரும் எங்களை வெம்பவிடுதல்,
எந்தவகை நியாயம் தாயே?
கொஞ்சமேனும் யோசி !
உன்முன் மண்டியிடும் பிள்ளைகளன்றோ யாம் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (13-Jan-14, 9:01 pm)
பார்வை : 92

மேலே