என் பயணம்

உனை நோக்கியே என் பயணம்
அனாதையாக நானிருந்தும் பெற்றோர் இல்லா குறை நீக்கி
தாய்க்குப் பின் தாரம் என்ற வார்த்தைக்கு
அர்த்தமாக நீ....
சொர்க்கம் பார்த்த கண்களிலே...
சொற்ப்ப நொடிகளில் நரகம் காட்டிவிட்டாய்...
உன் பிரிவால்....
கண்மூடித்தனமாக காதலித்தேன்...
கண்ணோடு கண் வைத்த நீ இன்று
கண்ணோடு புண் வைத்து செல்கிறாய்....
என்றும் பிரியாத
உன் நினைவுகளோடு என்றும் உனை நோக்கியே என் பயணம்....

எழுதியவர் : சந்தோஷ் கண்ணன்.ஆ (13-Jan-14, 8:45 pm)
Tanglish : en payanam
பார்வை : 93

மேலே