Nagarathu Pongal
Nagarathu Pongal palakapata kangaluku
Giramathil kondatum pongal murai, giramiya kalai nigalchigalodu (Thappatam, puliyattam ...)
kanum vaipu amaintha pothu eluthiyathu..
அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக
அறிஞர் பலர் எழுதிய நாவல்கள் நிறைய இருந்தும்
மனதிற்கு நெருக்கமானது
நம் பாட்டி கூறிய கதைகள்..
மின்னஞ்சல், குறுந்தகவல் நிறைய இருந்தும்
மனதிற்கு நெருக்கமானது
நம் கையால் எழுதி அனுப்பும் கடிதம்..
பஞ்சு மெத்தை அல்லது தண்ணீர் மெத்தை கொடுத்தாலும்
மனதிற்கு நெருக்கமானது
தாய் மடியின் தூக்கம்..
இசை பல வடிவங்களில் இருந்தும்
மனதிற்கு நெருக்கமானது
நம் கிராமிய இசை…
உண்மையை சொல்கிறேன்,
உங்கள் திறமையில் நாங்கள் எல்லோரும் இழந்த - கிராமிய இசை தாயின் அரவணைப்பை உணர்ந்தோம் இன்று...
என் இனிய தோழர் தோழிகளுக்கு...
என் சிரம் தாழ்ந்த நன்றிகள் மற்றும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.