மூன்றாவது தொகுப்பு-அறிவிப்பு

தோழமை நெஞ்சங்களே

தளத்தின் மூன்றாவது தொகுப்பு குறித்த அறிவிப்பு இது ....


பலரும் வேண்டிக்கொண்டதன் விளைவாக நமது மூன்றாவது தொகுப்பு முற்றிலும் பெண்படைப்பாளிகளின் தொகுப்பாக வெளி வர உள்ளது .

தமிழ் இணையதள வரலாற்றில் முற்றிலும் ஒரு தொகுப்பு பெண் படைப்பாளிகளால் அமையப்பெற்று வெளி வருவது இதுவே முதன் முறையாகும்..!!!!

சென்ற முறை முயற்சித்து இயலாமற் போன ஒரு செயற்பாடு இம்முறை சாத்தியமாகிட உள்ளது .

இதற்காக தோழர்கள் புலமி ,பிரியா , தாரகை,ஆகியோர் உள்ளிட்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது . ஆர்வமும் அணியமாகவும் உள்ள பெண் படைப்பாளிகள் தத்தம் 10 முதல் 15 கவிதைகளை மேற்கண்ட குழுவின் ஒருவருக்கு தோழருக்கு உடன் அனுப்பி வைக்கவும்...நாட்கள் குறைவாக உள்ளதால் விரைவாக செயல்படவும்..

நூலாக்க செலவை . அனைவரும் பகிர்ந்துக் கொள்ள இசைவும் தெரிவித்தல் நலம் பயக்கும்.

அன்புடன் அகன்

எழுதியவர் : அகன் (17-Jan-14, 6:03 pm)
பார்வை : 152

மேலே