மாணவன்

வாத்தியார்: ஏண்டா? வீட்டுப் பாடம் எழுதலை?
மாணவன் : கரண்ட் போயிடிச்சு சார்!
வாத்தியார்: மெழுவர்த்தி வச்சு எழுதலாம்ல!
மாணவன் : தீப்பெட்டி இல்லே சார்!
வாத்தியார்: ஏன் தீப்பெட்டி இல்லே?
மாணவன் : பூஜையறைலே வச்சுட்டாங்க சார்!
வாத்தியார்: போய் எடுக்க வேண்டியதுதானே?
மாணவன் : குளிக்கலை சார்!
வாத்தியார்: ஏன் குளிக்கலை?
மாணவன் : மோட்டார் ஓடலை சார்!
வாத்தியார்: இப்போ மோட்டாருக்கு என்னாச்சு?
மாணவன் : அதான், சொன்னேனே சார்!
கரண்ட் போயிடிச்சுன்னு !

எழுதியவர் : உமர்ஷெரிப் (19-Jan-14, 8:12 pm)
பார்வை : 483

மேலே