தலைகீழ்ப் பூக்கள்

வீசிக்கொண்டிருந்தது
காற்று. பெருங்காற்றிலிருந்து
தப்ப முடியாமல் உதிர்தலுக்கு அஞ்சி உதிர்ந்து கொண்டிருந்தன
ஒவ்வொன்றாய்.
இலைகளாய் பூக்களாய்
இருந்த மரம் சதைப்பற்றெல்லாம் உரிய
எலும்புக்கூடாய் மாறிற்று.
சட்டென்று ஒரு கணம்தான்....
தன்
கிளைவேர்களைக்
காற்று மண்ணில்
ஆழ்பரப்பி,
பூமிக்கடியிலிருந்த
வேர்க்கிளைகளில்
பூக்களாய், இலைகளாய்
பூத்துக்கொண்டது மரம்

எழுதியவர் : Akramshaaa (21-Jan-14, 11:10 am)
பார்வை : 82

மேலே