உறவு

அடிபட்டு கிடந்தான் அவன்

படுக்கையில், ஓடோடி

என்ன ஆயிற்று, எப்படி

கொஞ்சம் சூதானமாக

இருந்திருக்கலாமே , எப்படி

இருக்கிறது தற்பொழுது

என்றெல்லாம் கேட்கத்தான்

ஆசைப்பட்டேன், ஆனால்

சுவரில் ஒட்டிய பல்லிபோல்

கூட்டத்தின் ஓரமாய் நின்று

கொண்டுதான் இருந்தேன்

எங்கள் இருவர்க்கும் இடையேயான

உறவை யாரும் அறியாததால்..........,

எழுதியவர் : madhuprem (21-Jan-14, 5:48 pm)
Tanglish : uravu
பார்வை : 87

மேலே