அன்பு ஒன்றே பக்தி மார்க்கம்

பிடிக்குள் அடங்கும்
பிரகாசிக்கும் சூரியன் - உன்
பிரியமே போதும்...
பிறகு வேறென்ன வேண்டும்...!!
நினைத்துப் பாரு இந்
நிலமே தொட்டில்
நீ கேட்கும் ஓசைகள்
நிம்மதித் தாலாட்டு....!!
எதிரே வருவது
எதிரி அல்ல நண்பா ! உன்னை
எப்படி இருக்கிறாய்
என்ற - தாலாட்டின் ஒரு வரி...!!
மென்மையாய் ரசித்திடு - மனிதற்கு
மேல் இல்லை எதுவும் மண்ணில்...
மேன்மையை பழகிடு - அன்பை விட
மேல் இல்லை எதுவும் பக்தியில்......