கவிஞர்கள் நாம் காலத்தை வென்றிடுவோம்

பச்சை கம்பளத்தில் சிதறிய முத்துக்கள்
பசுமை தடாகத்தில் அழகிய அன்னங்கள் !

கூடியே இரைதேடும் இனத்தின் ஒற்றுமை
கூட்டம் போடுவதிலும் நம்மில் வேற்றுமை !

​ஐந்தறிவு பறவைகளின் ஐக்கியமே காட்சி
ஆறறிவு மனிதனுக்கு இதுவன்றோ சாட்சி !

பறவைகள் பாடுகிறது ஒருமைப் பாட்டை
பாடமாய் சொல்கிறது நிலைப் பாட்டை !

காணும் விழிகள் வியப்பால் விரிகின்றன
நாணும் மனிதனோ மாறிட மறுக்கின்றான் !

இனத்தில் வேறுபாடு மனத்தில் மாறுபாடு
இன்றைய மக்களின் மாறாத நிலைப்பாடு !

என்றுதான் இதயங்கள் இணைந்திடுமோ இங்கு
அன்றுதான் இன்பமும் மலர்ந்திடும் இங்கே !

தரணியில் மட்டுமல்ல தளத்திலும் மாறிடுக
பரணியும் பாடிடுவோம் பரந்த மனதுடனே !

கவிதைகள் படைத்து கவியுகம் காண்போம்
கவிஞர்கள் நாம் காலத்தை வென்றிடுவோம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-Jan-14, 10:03 pm)
பார்வை : 232

மேலே