இந்த காதலில் தான்

பழையன அனைத்தும் புதிதாய் தெரிவதும்,
கைப்பட்ட குப்பைகள் புதையல் ஆவதும்
இந்த காதலில் தான். .

கண்கள் நான்கும் பேசுவதும்,
கனவை சுமந்து தூக்கத்தை இழப்பதும்
இந்த காதலில் தான். .

காலத்தை மறந்து காத்திருப்பதும்,
வயது கூடாமல் பிடித்துவைப்பதும்
இந்த காதலில் தான். .


கனிக்கு ஆசைப்பட்டு விதையாவதும்,
வேலியில்லாத போதும் வரம்பு மீறாததும்
இந்த காதலில் தான். .


அன்பைத் தேடி அனாதையாவதும்,
நாணயம் தேடி சில்லரையாவதும்

இந்த காதலில் தான். .

எழுதியவர் : Piranha (29-Jan-14, 3:39 pm)
பார்வை : 164

மேலே