விவசாயம்
ஏ மனிதா ...!
கணினியை தட்டி
நீ ஆயிரம் மென்பொருளை
தயாரிக்கலாம்.
ஆனால், உன்னால்
ஒரு நெல்மணியை கூட
தயாரிக்க முடியாது. ...!!
அனைத்து நாடுகளும்
விவசாயத்தை வளர்க்கிறது..!
ஆனால்,நாமோ விவசாய நிலங்களை
அழித்து கொண்டிருக்கிறோம் ...!
உணவு வாங்க பணம் வேண்டும்...
என்று விவசாய நிலத்தை விற்றாய்.
நாளை உன் கையில் பணம் இருக்கும்...
உண்ண உணவு இருக்காது..
பணத்தையும் உண்ண முடியாது...
இந்த நிஜத்தை நீ
என்றுதான் உணரப்போகிறாயோ
தெரியவில்லை..?!
உணரும்போது உயிருடன் இருப்பாயா???