விலைமகள் விளக்கு

ஊருக்கு நடுவே கோயில்...

கோயிலின் நடுவே இரண்டு மின்விளக்குகள்...

மேனி எங்கும் பெயர் பொறித்திருந்ததால்
செல்வந்தன் கொடுத்த விளக்கு மங்கலாய் எரிந்தது.

அவன் அவளுக்கு கொடுத்த விலையில்
விலைமகள் கோயிலுக்கு வாங்கிய விளக்கு
பெயர் இல்லாமல் மூளியாய் எரிந்தது

அவள் வெளியே...
அவன் உள்ளே
- விஐபி தரிசனம்

பெயர் சொல்லக் கூசிய
விளக்கே பளிச்சென எரிகிறது
என்று கணக்கு எழுதிக் கொண்டது கடவுள்.

எழுதியவர் : புதுயுகன் (30-Jan-14, 3:24 am)
சேர்த்தது : pudhuyugan
Tanglish : vilamakal vilakku
பார்வை : 102

மேலே