கதம்பம்
நன்றி கெட்டவர்களும்
வளர்க்கிறார்கள்
நாய்!
அவன் முதலிரவில்
அவள் நீட்டிய பால் சொம்பில்
தெரிந்தது எவளுடையதோ முகம்.!
சிகிச்சைக்குப் போய்வந்த பின்னரே
கண் உறுத்தியது மனைவிக்கு
பெண் வைத்தியரின் புதுச்சேலை!
மந்திரி இறக்குமதி செய்தார் வரிக்குதிரை.
சுங்கத்தின் குடைச்சலுக்கு பொது பணத்தில்
தந்திரமாய் போட்டுவிட்டார் வரிக்கு திரை!
கல்லறைக்கு செல்லுகின்ற பாதை
சொல்லாமல் சொல்லிவிட்டாள் சீதை.
இல்லை என்று போன திருமணம்
இனி வீசாது வாழ்வில் நறுமணம் என்று
சில்லரையாய் சாக அருந்தலாமோ போதை?