கதிரவனுக்கும் தூக்கமா

காலைப் பொழுது
விடியும் நேரம்
சிட்டுக் குருவிகள்
கும்மாளமிடும் நேரம்
கதிரவன் மேலெழும் நேரம்
இருட்டு விலகியும்
வில காமல் இருக்கும் நேரம்
மசண்டை என்று
குறிப்பிடும் நேரம்
தினம் வந்தாலும்
இன்று சற்று மாறுபாடு
கண்ணைக் கசக்கி கொண்டு
பார்க்கும் போது
கதிரவனைக் காணவில்லை
சாளரத்தின் வழியே
எட்டிப் பார்க்கும் பொழுது
சிட்டுக் குருவிகளின்
கூச்சல் கேட்கவில்லை
பதற்றம் மனதில் பரவ
கதவை திறந்த வேளை
இருள் நீண்டு கொண்டு
போனது ஏகமாக
கதிரவனுக்கும் தூக்காமா
நின்று நின்று ஒவ்வொரு நாளும்
சுடரோடு அலைந்த களைப்போ
என்ன தேக்கமோ நின்றேன்
வாசலில் விக்கித்துப் போய்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (30-Jan-14, 7:33 am)
பார்வை : 1524

மேலே