வெட்கப் பேரழகியலோ
மஞ்சள் முகம் சிரிக்க
கனவோடு வந்து
ஆழ் உறக்கம் தரும்
சூலோடு மகரந்தம்
குழல் நீட்டி வளர்ந்த
செம்பருத்தி பெண்ணே....
நீ என்ன
காம்பு பிடித்து நான்
முத்தமிடும் போதெல்லாம்
அதரம் இழுத்து விரித்து
இதழ் சிவக்கும்
வெட்கப் பேரழகியலோ....!!!!!!!