இதை மட்டும் சொல்லாதே

என்னைப் பார்க்காதே என்றாய்
என் கண்கள் குருடாகின
என்னுடன் பேசாதே என்றாய்
என் உதடுகள் ஊமை ஆகின
என்பின் வராதே என்றாய்
என் கால்கள் முடமாகின
என்னைத் தீண்டாதே என்றாய்
என் கைகள் அழுதன
இதையெல்லாம் சொன்ன நீ
இறக்கம் இல்லாமல் என்னை மறந்துவிடு என்றாய்
என் இதயம் இறந்துவிட்டது
காரணம் இதயம் துடிக்க மறந்தால்
இறந்துவிடும்
என் இதயத் துடிப்பே
நீதான்

எழுதியவர் : த.பார்த்தி (6-Feb-14, 12:59 pm)
பார்வை : 141

மேலே