வாடா மலர்

நேற்று மலர்ந்த ரோஜாக்கள்
மெச்சிக்கொண்டன
அதன் மென்மையைப் பற்றி…
பாவம் மறந்து விட்டனவோ
என்னவோ உனது உதடுகளை !
காலையில் மலர்ந்ததற்கே நிமிர்ந்து
நிற்கின்றன கர்வத்துடன்…
பாவம் நீ என்றும் வாடா மலர்
என்று அறியாமல் !
பறித்தது கூடத் தெரியாமல்
எள்ளி நகையாடிக் கொண்டன…
அதனைப் பறித்தது
நீ என்பதால் !…