கடவுளே கடவுளே

அபிஷேகம் ஆயிற்று
அலங்காரத்துடன்
அருள்பாலித்தார் கடவுள்
திரைக்குப் பின்னே ..!
பூசாரி காத்திருந்தான்; தான்
எதிர்பார்க்கும் கூட்டத்தையும்
எதிர்நோக்கும் தலைவனையும் ..!
ஐயர் வரும்வரை அமாவாசை
காத்திருக்குமா ஐயா ..!?
காத்திருப்பான்
நம்மைப் படைத்தவன்
நாம்படைத்தவன் தானே ...!
(கடவுளே ..! கிட உள்ளே ?)