தாய்மையின் அலகின் அழகு

சொல்லிக்கொடுத்ததார் பக்சிக்கு
பாசத்தை தான் பறந்து பறந்து
பத்திரமாதோர் இடம்தேடி மரத்தின்
உச்சியிலே அழகாய் கூடமைத்து
ஆறு குஞ்சினையும் ஆனந்தமாய்
குடிவைத்து இயன்றவை இரைதேடி
பசியாற்ற வீடு வந்து தான் உயிர் சுமந்த
வயிற்ருக்குள் உணவையும் தன் அலகால்
அழகாகவே ஓர் இறையூட்டல் தாய்மையின்
தனித்துவமிங்கு தத்ரூபமாய் தனிப்பாட்டாய்
இந்த தரணியெங்கும் ஒலிக்குதம்மா,,,

தாய்மையே உன்னை போற்றுகிறேன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (12-Feb-14, 5:57 pm)
பார்வை : 709

மேலே