மீண்டும் கிடைக்குமா கருவறை

அன்று துளத்ததும் இன்று
தொலைந்ததும் நானே
இரு உயிர்களின் சங்கமத்தில்
உருப்பெற்றவன் நான்
என் துடக்கமே போராட்டத்தில்
சக உறவுகளோடேயே முதல் யுத்தம்
வெற்றிபெற்ற எனக்கு யுத்த சட்ட
தண்டனை பத்துமாத கருவறை
மனிதனாய் உரு மாறியதால்
வெளிவந்தேன் விடுதலையாகி
இருட்டறையில் வாகைசூடிய நான்
வெளிச்சத்தில் வாழமுடியவில்லை
இருண்ட கருவறையின் மகிழ்ச்சி
இவுலகத்தில் கிடைக்கவில்லை
போட்டி போட்டு பழகிய எனக்கு
இந்த பொறாமை புரியவில்லை
இதுதான் வாழ்க்கை என்றால் வால்
இருந்தபோதே மாண்டிருப்பேன் ,,,,

கிடைக்கா கருவறை தேடி ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (12-Feb-14, 5:59 pm)
பார்வை : 581

மேலே