பாதம் தரும் போதை

பால் நிலவின் மீதிஒளி உன் பாதம்மடி
நிலம் நீவி நீ நடக்கையில் மனமேவுதடி
பாதம் காட்டி போதை தந்த பேதையடி
பாவாடையதை மேலே தூக்கிபிடித்தபடி
உன் பாதமதில் பனி நீர்துளி தெளிக்குதடி
முத்துமணி சுமந்தேயுன் கொழுசினொலி
எனை கடந்து செல்கிற நல் வேளையடி
கொஞ்சும் சிணுங்களில் என் நெஞ்சமடி
கொஞ்சம் சிதைந்தே தான் போனதடி
மெல்லிசையில் பெண்ணிசை சேர்ந்தபடி
புது சிம்பொனிபோலேயது இசைக்குதடி
பூவுக்கு சமனாம் பூவையர் தம் பாதமடி
பூவுமின்கே உன் காலடியின் கீலுள்ளதடி

உன் பாதசுர ஓசையோடு ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (12-Feb-14, 6:01 pm)
பார்வை : 114

மேலே