கண்டு கொண்டேன்





கடவுளைத் தேடித் தேடி
தேய்ந்து போனது
கால்கள்!

காண முடியாமல்
காய்ந்து போயின
கண்கள்!

இறுதியில்
இமைகளை
மூடிக் கொண்டு
தேடினேன்!

ஞானம் பிறந்தது...
பத்து மாதங்களாய்
கருவறையில் காத்து
பெற்று வளர்த்த
தாயே கடவுள்..!

எழுதியவர் : Rameshraj (26-May-10, 12:54 pm)
சேர்த்தது : Rameshraj
Tanglish : kandu konden
பார்வை : 586

மேலே