கவிதைக் காதலி
கவிதைக் காதலி
*************************
புவிதனை வளர்க்கும்
கவிதை யும்ஒரு காதலி--
வாஎன்று அழைத்தால்
வந்திடுவாள் பலநேரம்--
வாவா என்று பலமுறை
வருந்தி அழைத்தாலும்
வருவதில்லை சிலநேரம்--
வரினும், வாராவிடினும்
வாழ்வுஎனக்கு அவளே--
******************************************