காதல் வம்பு பண்ணுறா

வத்திப்பெட்டி கண்ண வச்சு
வத்திக் குச்சி ஒரசிப் போடுறா..

கச்சி விட்டு கச்சி மாறிப்
போன மனச கொடுக்க மறுக்குறா..

வெத்தலைய போலத்தான்
இதயத்த மென்னு முழுங்குறா..

வில்லப்போல வெட்கம் வளச்சு
காதல் அம்பு வீசி எறியுறா..

நெனப்ப எல்லாம் நனச்சு புட்டா
பொழப்ப எல்லாம் கெடுத்து புட்டா..

கருத்த குழல விரலால் வருடி
மனச களச்சு போயி புட்டா..

கண்ணுக்குள்ள ஒழிச்சு வச்சு
காதல தேட சொல்லுறாளே..

கை அசைவில் பல உருவம்
வரஞ்சு வச்சு கொல்லுறாளே..

கொலுசில்.. கத்தி வச்சு நடக்குறா
மனசின்.. அடி வரைக்கும் குத்துறா..

வெட்டி வெட்டி பாக்கும் தொனியில
உசுர.. துண்டு துண்டா வெட்டுறா..!!

எழுதியவர் : வெ கண்ணன் (15-Feb-14, 2:01 pm)
பார்வை : 134

மேலே