முத்துக் கல்
மண்ணுக்கு காதல் வந்தால்
காற்றை பிடித்து
கல்லை தேடி வரும்
காதலிக்க.....
உனக்கு காதல் வந்ததால்
மின் செய்தி பிடித்து
என்னை தேடி வந்தாய்
காதலை பறிக்க
துடித்த இதயம் கல்லானது - என்
காதலை நீ கொண்டதால்
உயிர் உனை தேடி வந்ததால்
சிலையானேன் நான்
காற்றாய் மாறிப் போனாய் நீ
கல்லாய் மாறிப் போனேன் நான்
நீராய்...... என் கண்ணீராய் மாறியது
காதல்.....
என்னையும் என் கண்ணீரையும் அழகாகியவள் நீதானே....