உப்பு

காதலில்
தோல்வியுறும்
மீன்களின்
கண்ணீர் !
தொட்டியிலிருக்கும்
தண்ணீரில்
தெரியாதென்றாலும்
கடல் நீரில்
தெரிந்துவிடும்
தேங்கி நிற்கிற
கடல் மீன்களில்
சோகம் !
சுவையுணரார்
சோகமரியார்
சொந்தமில்லா
சோகத்தையும்
கடலிலிருந்து
பிரித்தெடுக்க
உப்பு !

எழுதியவர் : விஜயகுமார்.து (17-Feb-14, 2:16 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
Tanglish : uppu
பார்வை : 84

மேலே