எடுக்கும் ஜென்மங்களிலும் உன் காதலி

என் வலியினை உணர முடிகின்றது .
என் கண்ணீரை துடைக்க முடிகின்றது .
என் சோகங்களை மறைக்க முடிகின்றது .
உன் நினைவுகளை மட்டும்
என்னால் எதுவுமே செய்ய முடியாது .
ஏனென்றால் ,
என் இதயத்தின் மூலைமுடுக்கெல்லாம் ,
உன் நியாபகங்கள் என்னை ஒவ்வொரு நாளும் வாட்டிவதைக்கின்றது .................
எனக்கு சரியென்று தெரிந்த காதல்
உனக்கு தவறானது ,
நான் உறவாக நினைக்க ஏங்கும் போது
நீ வீணாக விலகி கொள்கிறாய் ......
இதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும்
என்று எனக்கு தெரியவில்லை .
ஆனால் இந்த காயமில்ல வலியினை
என்னால் தங்க முடியவில்லை .
காரணம்-"உன் மீதான என் காதல் "
இந்த வலிக்கு மருந்து
நீயாக மட்டும் தான் இருக்க முடியும்
என் வாழ்க்கையில் ................
அதை உணர நீ எத்தனை ஜென்மங்கள்
எடுத்தாலும் .
அப்பொழுதும் நான் மட்டுமே உன் காதலியாக பிறக்க ஆசைபடுகின்றேன்.......