இயற்கையின் செழிப்பு
பார்த்ததும் ஈர்க்கும் அழகு!
விழியில் நீர் ததும்பிட,
இதழில்! தேன் வழிந்திட,
மனதில் கவிமழை! பொழிந்திட,
தென்சாரல் தேகங்களைத் தழுவிட,
கார் மேகக் கூந்தல் காற்றிலே கவிபாடிட,
பாடிய கவியை பூவிரல்கள் உயிர்ப்பித்திட,
பாதங்கள் புல்லின் மேல் பனியாய்! படர்ந்திட,
உயிரின் சிறு தேடலை!
பறவையின் பாடலில் உணர்ந்திட,
எத்தனை அழகு!
சொல்லிட கோடி வார்த்தைகள்,
சொல்லும் போது சிறு மௌனம்!
இரசனையின் பிறப்பிடம் ,
சந்தோஷத்தின் உச்சகட்டம் ,
கற்பனையின் உருவகம்,
கவிதையின் முதல் பிறப்பிடம்!!!
முடிவுரைக்கு சிறு முற்றுப் புள்ளிகள்
தேடிட வேண்டாம்.
நாமும் பயணித்திடுவோம்,
"சாலையோர மரங்களாய்",,,,,,,,,,,,,''''''