நட்பு

நண்பியே!
நாம் கண்ட கனவுகள்,
நாம் செதுக்கிய கற்பனைகள்,
நாம் கட்டிய கோட்டைகள்,
எல்லாமே கானலாகி...
ஞாபகங்கள் வந்து மோதும் போது
கரை சேரும் அலையை போல்
விழியோரம் ஒரு துளி நீர்!
கண்ணீர் விட்டு கதறி
அழத் தான் எண்ணுகிறேன்,
ஏனோ அதுவும் இயலவில்லை...
வாய் விட்டு சிரித்த நாட்கள் - இன்று
கை எட்டா தூரமதில்!
நான் புன்னகைக்க ஆசைப்படுகிறேன்,
தோழியே உன் முகம் பார்த்து...

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (23-Feb-14, 5:54 pm)
Tanglish : natpu
பார்வை : 296

மேலே