மழையாக

வெண்ணிலவின் அழகில்
மயங்கி மையலான
மின்னலழகன் கண்ணடிக்க ...
சினம் கொண்ட இடிகாளை
சீற்றம் கொண்டு சண்டையிட ...
அடிதடி மோதலில் மருண்டு
வானமகள் விழிநீர் சிந்தினாள்
மழையாக ...!!

எழுதியவர் : ராஜ லட்சுமி (27-Feb-14, 4:02 pm)
Tanglish : mazhayaaga
பார்வை : 337

மேலே