உன் அழகு
பூக்களிலே நீ பனித்துளியா?
புன்னகைக்க மறந்தால்
தேன்துளியா?
மலர்களிலே நீ மல்லிகையா?
வாடி நின்றாலும்
வாசமுண்டா?
வெட்கத்திலோ இல்லை கோபத்திலோ
உன் கன்னங்கள் சிவந்தால்
மாதுளையா?
உதட்டினிலே என்ன தேன்துளியா?
அது உலர்ந்திருந்தாலும்
இனித்திடுமா?
நடையினிலே நீ பூங்கொடியா?
நடை மறந்தாலும்
வெண் சிலையா?
உன் கண்ணசைவில் புதுக்கவிதைகளா?
நீ உறங்கிடும் போதும்
இசைத்திடுமா?
என் கனவினிலும் உன் நினைவுகளா?
நான் கண் விழித்தாலும்
நீதானா?