தனிமையிடம் தஞ்சமா நெஞ்சம்

​​​தனிமை விரும்பிடும் உள்ளமதோ
இனிமை வேண்டி அமர்ந்துள்ளது !

இயற்கை சூழ்நிலையை அறியாது
இதயமது கவலையே கொள்ளாது ​!

தனிமையிடம் தஞ்சமா நெஞ்சம்
தள்ளப்பட்ட நிலையே காரணமா !

காதலியின் வரவிற்கு காத்திருப்பா
காதல் வயப்பட்டதன் விளைவா !

ஆசனத்தின் மேல் ஆசுவாசம் ஏன்
ஆசை நாயகி வரவிலே தாமதமா !

இருக்கையின் மேல் இருப்பதென்ன
இருப்பு கொள்ளாமல் தவிப்பதென்ன !

இதயத்துடிப்பு வேகமும் கூடுகிறதோ
இதயத்தில் இருப்பவளின் நினைவால் !

பனிமழை படாதிருக்க குடையா
மழைநீர் விழாமலிருக்க தடுப்பா !

சலனமுள்ள மனத்திற்கு மாற்றுவிழியா
சமாதனம் பெற்றிட தனிமை நிலையா !

தன்னிலை அடைந்திட தனிமைதானே
முன்னிலை மருந்தானது எக்காலமும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (4-Mar-14, 7:20 am)
பார்வை : 440

மேலே