வாழுங்கள் பல்லாண்டு

வாழுங்கள் வளமுடன் இதமாக பல்லாண்டு
வாழ்த்த பலநண்பர் வருவர் பூக்கொண்டு
வானவில் நிற ஒற்றுமை உங்களுக்குண்டு
வான் சிறப்பாம் வள்ளுவனின் மாரியுமுண்டு
வாடாமலர் சூடியநின் வாழ்வில்மாறா மணமுண்டு
வாசமுடன் வீசும்தென்றல் தரிசனம் நிதமுண்டு
வாழுங்கள் வாழ்வை புது அர்த்தங்கொண்டு
விண்ணும் மண்ணும் முத்தமிடும் நிகழ்வுண்டு
வயிறார அன்புடன் ஊட்டும் அன்னமுண்டு
வாழ்வியல் அறத்தில் வள்ளுவன் துணைகொண்டு
வாழிய பல்லாண்டு ! வாழ்க்கை துணைகொண்டு!!

நண்பரின் திருமண வாழ்த்திற்காக எழுதியது...

எழுதியவர் : பாவூர்பாண்டி (10-Mar-14, 9:14 am)
பார்வை : 145

மேலே