இவள் தான் இயற்கையின் முதல் அதிசயம்

பாவை அவள் விழிகளிரண்டும்
பிரம்மன்
மறைத்து வைத்த
முழு மதி என்பேன்

புருவங்கள் இரண்டும்
கருப்பு சிகரம்
அழகிய நெற்றியோ
அருபா தீவு

என்னவளின் உதடுகள்
லீலி புஷ்பம்

கன்னங்களோ
வெடித்த மாதளம்பழம்

கூந்தலோ
மருதோன்றி பூங்கொத்து

சிரித்தாள் தோன்றும்
கன்னக்குழி
ஆண்கள் ஆசையாய் - தவறி
விழும்
வசியப் பள்ளத்தாக்கு

அவள் அங்கம்
நான் தலை சாய்க்கும்
அந்தபுரம்

மெல்லிய இடையோ
மெழுகில் செய்தது
அவள் ரவிக்கையில் தீ மூட்டி
பார்ப்போர் கண்களை சாம்பலாக்கிவிடும்

கால்கள் பனை மரம் போல்
செழித்தோங்கியுள்ளது

பாதங்களைமட்டும் - கடவுள்
பூவிதழில் செய்து வைத்தானோ
என்னவோ
அவ்வளவு மென்மை

தேனிலும் மதுரம்
அவள் குரல்
பேசினால்
வார்த்தைகளில் தேனொழுகும்

என் காதலி
பெண்களுக்குள் ரூபவதி

அவள் பெயர்தான் என்ன ?
பேரழகியோ ?
இவள் தான் இயற்கையின் முதல் அதிசயமோ !!!!

எழுதியவர் : ஏனோக் நெகும் (10-Mar-14, 4:05 pm)
பார்வை : 135

மேலே