இடையில் நீ ஏன் வந்து இட ஒதுக்கீடு பேரம் பேசுகிறாய்

சுமைகள் எங்களுக்கு புதிதல்ல
அது பழகிப்போனவை,
உன்னையும் உன் பிள்ளையும்
சுமந்தவள் பெண்தான்..!

உன்னை விட வேகமாய்
எங்களால் இயங்க முடியும்,
உனக்கு பின் உறங்கி
முன் எழுபவலும் பெண்தான்..!

காதலில் நீ கவிதை எழுதினால்
எங்களால் கட்டூரையே
எழுத முடியும்,
காதலில் உன்னை விட
தைரியசாலி பெண்தான்..!

இயற்கை கொடுக்கும் எல்லாம்
எல்லோருக்கும் சமம்தான்,
இடையில் நீ ஏன் வந்து
இட ஒதுக்கீடு பேரம் பேசுகிறாய்..!

எங்களுக்கு நடக்க தெரியும்
நீங்கள் எங்கள் கால்களை
இடறிவிடாமல் இருந்தால்
போதும்..!

-தினேஷ்

எழுதியவர் : தினேஷ் (10-Mar-14, 5:14 pm)
பார்வை : 61

மேலே