அவளின் நிழலாக நிற்கையில்
நிலவை ரசிக்க நிலவிடமே
விழிகளை கேட்டு நிற்கிறேன்
மாலை ரசிக்க மாலையிடமே
மனதை கேட்டு நிற்கிறேன் !
கவிதை எழுத கவிதையிடமே
விழி மொழியை கேட்டு நிற்கிறேன்
கனவை செதுக்க காதலிடம்
கற்பனையை கேட்டு நிற்கிறேன் !
காதலை அழகாக்க காதலியிடமே
நான் காணும் கண்களை கேட்டு நிற்கிறேன்
என்னுயிரை காண்பதற்கு அவளிடமே
காதல் இதயம் கேட்டு நிற்கிறேன் !
பட உதவி : நன்றி : புகைப்பட நிபுணர் , திரைப்பட நடிகர் வசந்த குமார்