நம்பிக்கை
கனவாகவே இருக்கட்டும் -ஆனால்
அடையும்வரை அது களயாதிருக்கட்டும்!
காற்றாகவே வீசட்டும் - ஆனால்
மூசுக் காற்றாக அது இருக்கட்டும் !
நிலவாக ஒளிரட்டும் - ஆனால்
பிறையின்றி முழுதாக ஒளிக்கட்டும்!
மண் நீராய் இருக்கட்டும் - ஆனால்
தாகம் தணிக்கும் தண்ணீராய் உதவட்டும் !
தீயாக எரியட்டும் -ஆனால்
தீயவை எரித்து , நல்லவை சமைக்கட்டும் !
ஆகாச மாகவே இருக்கட்டும் -ஆனால்
அது மனுச மனசுக்குள் விரிந்திருக்கட்டும் !
நம்பிக்கை இருக்கட்டும் -ஆனால்
தன்னம்பிக்கையாய் அது தளையட்டும் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
