கவிதை பரிமாறினேன்

இணையப் பந்தியில்
எழுத்து.காம்
என்ற இலை விரித்து
கவிதையூர் நண்பர்களை ்
கவிஞர் சொந்தங்களை
விருந்துக்கு அழைத்து
நள பாக கவி படைத்து
அறுசுவை விருந்தளித்து
விமர்சன பரிசுக்காய்
கருத்தென்னும் "மொய்" க்காய்
காத்திருக்கேன்
சொந்தங்களே....
விமர்சித்தால் விருட்சமாவேன்

எழுதியவர் : சித்ரா ராஜ் (19-Mar-14, 8:43 pm)
பார்வை : 89

மேலே