திருமணமாம் திருமணம்
பறந்து திரியும் பட்டாம் பூச்சியின்
சிறகை ஒடித்து...
கண்களை கட்டி
கதை சொல்வதாய் நினைத்து
கண்ணீர் விட வைத்து
வாழ்க்கை தருவதாய் கருதி
அதன் வண்ணங்களை பறித்து......!!
பின்னர்
விடவும் முடியாமல்
ஏற்றுகொள்ளவும் முடியாமல்
தவிக்கும் போலி போர்த்தல் தான்
"கட்டாய கல்யாணம்..."
திருமணம் ஒருநாள் திருவிழா இல்லையே..
.........மனதார வந்தால் ஏற்றுகொள்ளுங்களேன்...:(