வேர்களின் ஈரப் பதங்கள் வறண்ட நிலத்துக்கு நிழல் தரும் - கருகி உதிரும் இலைகள் கை விரல்களால் வருடி விடும் - எனவே

சாப்பிடுமுன்
கைகளைக் கழுவுங்கள்....
சத்தம் போடுமுன்
வெறுப்பைக் கழுவுங்கள்....

தவறென்றே அனுமானித்து
தன்னிலை தவற வேண்டாம்....
குறையென்றே முடிவுசெய்து
குற்றங்கள் காணவேண்டாம்....

நிறைகளை பயிற்றுவித்தால் - இனி நம்
குறைகளும் நிறைகளாகும்....!
நிறைவதால் குறைகள் யாவும்
நிறைவதே நிறைகளாகும்....!!

நிறைத்து வைப்போம் நிம்மதியை எங்கும்
நீடுழி வாழ்வோம் நிலம் பிரிந்த பின்னும்...!!

பூக்கள் வாசம் நிறைக்கிறது.....
பத்தி வாசம் நிறைக்கிறது....
வாடியும் கருகியும் அதன் வண்ணம் மாறுகிறது
எனினும் அவை - இவ்
வார்த்தைகளில் ஏன் இங்கு வந்து நிற்கிறது ?!

உயிர் வந்ததன் / உயிர் செல்வதன்
உண்மை நிலை உணர்வோம்.....
உலகத்துக்கு ஆனமட்டும்
உதவிகள் சில செய்து மறைவோம்.........

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (20-Mar-14, 12:48 pm)
பார்வை : 96

மேலே