வண்ணமிகு மனிதர்கள் இங்கே

​வண்ணமிகு மனிதர்கள் இங்கே
​எண்ணமோ கருப்பு வெள்ளை !

சாதியில்தான் பல நிறங்கள்
இரத்தமோ ஒரே நிறம்தான் !

கொள்கையில் பலவிதங்கள்
பதவி மோகமோ ஒரேவிதம்!

இனம் மொழியில் பலவகை
ஆசையும் தேவையும் ஒரேவகை !

சாதிஒழிப்பு முழக்கம் மேடையில்
வரன் தேடுவதோ அவர் சாதியில் !

வரதட்சினை எதிர்ப்போ ஓங்கிடும்
வாதமோ எத்தனை சவரன் என்று !

சீர்திருத்த திருமணமே என்பார்
சிங்கார மாளிகையில் மணம் என்பார் !

எளிமையே என் வாழ்வு என்பார்
குளு குளு வாகனத்தில்தான் பயணம் !

காந்திய வழிதான் என் வாழ்வு என்பர்
காலை மாலையும் மதுவே குடிப்பார் !

என் தேசம் என் மக்கள் என்பார்
எந்நேரமும் அயல்நாட்டில் இருப்பார் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (21-Mar-14, 8:43 am)
பார்வை : 120

மேலே