தேர்ஆறுதல் கவிதைகள்

தேர்{ஆறு}தல் சென்ரியு கவிதைகள்
*
யாருக்கு ஓட்டளிப்ப தென்று
இலவசம் பெற்றுக் கொண்டவர்கள்
இருதலைக் கொள்ளியாய் தவிப்பு.
*
கூட்டணியிலிந்தவர்கள் விலகினார்கள்
விலகியவர்கள் கூட்டணியில் சேர்ந்தார்கள்
உருவானது கூட்டணித் தத்துவம்.
*
விவாதத்தில் பங்கு கொள்ளாத
பாராளமன்ற உறுப்பினர்
ரசித்துக் கொண்டிருந்தார் ஆபாசபடம்.

*
பரபரப்பாகப் போனார் காரில்
பிரியாணிச் சாப்பிட
மாணவி பலி.
*
தனித்துப் போட்டி என்று
அறிக்கை விட்டார்கள்
தவித்துப் போனார்கள் தொண்டர்கள்.
*
தேர்தல் பேச்சு
தேனாய் இனித்தது
கசக்கிறது பொய் வாக்குறுதிகள்.

எழுதியவர் : ந.க.துறைவன் (21-Mar-14, 9:27 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 72

மேலே