என் தோழி
கள்ளங்கபடமில்லாத
அந்த கால்சட்டை நாட்களுக்கு ......!
காலம் முழுதும் நான்
நன்றிகடன் பட்டவனாகிறேன் .......!
சின்ன சின்ன கனவு சுமந்து......!
சிறகடித்து பறந்து திரிந்து .......!
இதயத்தில்
சித்திரமாய் பதிந்துபோன.......!
அந்த பட்டாம்பூச்சி வாழ்க்கையை ......!
இன்னும் மனதுக்குள் ........!
பத்திரமாய் வைத்திருக்கிறேன் கொஞ்சம்.......!
அதைத்தான் இப்பொழுது
அசைபோடுகிறது நெஞ்சம் .......!
அவள் .....!
என் பால்ய வயதின்
பசுமை மாறாத பூந்தோட்டம்.....!
அவளை நினைத்தால்
இப்பொழுதும்
என் இதயம் தேன்சொட்டும்........!
என் இளமைகால
எண்ணங்களுக்கு........!
வர்ணம் அடித்த
சின்னக்குயில் அவள்தான்......!
அவளது நேசம் ......!
ஒரு தாயின் அன்பை போல
மென்மையானது ......!
அவளது நட்பு......!
தண்ணீர் கலக்காத பாலைப்போல
தூய்மையானது.......!
அன்று ......!
என் கைபிடித்து
வீதிகளில் விளையாடிய
அந்த தென்றல்தான்.......!
இன்று ......!
என் விரல்பிடித்து எழுதும் பேனாவுக்கு
மை தந்திருக்கிறது.........!
என் வழக்கை பயணத்தின்
வழியோரம் கிடைத்த
அவளின் சிநேகம் தான்......!
இன்று .....!
என் விழிகளில் வழியும்
கண்ணீருக்கு காரணமாய் இருக்கிறது ......!
காதல் கலக்காத காற்றை
சுவாசித்தோம்.......!
சாதி பார்க்காத சமத்துவம்
யாசித்தோம் ......!
தென்றலும் பூக்களும் போல
நேசித்தோம் ......!
களவு போகாத கனவு.......!
உளவு பார்க்காத சந்திப்பு .......!
செலவு வைக்காத சண்டை .......!
இவைதான் ......!
நாங்கள் போற்றி வளர்த்த
பொக்கிஷம்......!
கண்ணாமூச்சி விளையாடினாலும் .......!
ஒளிந்துகொண்டு கண்டுபிடித்தாலும் ......!
நானாக அவளை தொட்டதில்லை ......!
ஆனாலும் ......!
அவள் என்னை
ஒருபோதும்
தோற்றுபோகவிட்டதில்லை........!
பள்ளி போட்டிகளில் .......!
என் வெற்றிக்கு கிடைத்த
முதல் பாராட்டு .......!
அவளுடையதுதான்......!
என் தோல்விக்கு கிடைத்த
முதல் ஆறுதலும்........!
அவளுடையதுதான் .......!
இப்படி .....!
பன்னீர் தெளித்த
அந்த ரோஜாப்பூ நாட்களை.......!
நினைக்கும் பொழுதெல்லாம்
கண்கள் கண்ணீர் தெளிக்கிறது........!
இறுதி வகுப்பு
முடிந்த பிறகு
நட்பு எங்களை
உருகி உருகி நேசித்தாலும்........!
காலம் எங்களை பிரித்தே விட்டது.........!
"அன்பு கொண்டவர்கள்
அருகில் இருக்ககூடாது "என்பது
காலத்தின் நியதி.......!
ஆனாலும் .......!
காலத்தை மீறி நாங்கள்
கைகோர்க்கும் பொழுது......!
நிச்சயம்
காலம்
எங்களுக்காக கண்ணீர் சிந்தும்.......!
இன்று அவள்
என்னோடு இல்லையென்றாலும்......!
நான் மண்ணோடு போகும்வரை .....!
என் கண்ணோடு கலந்திருப்பாள்.......!
நெஞ்சோடு நிறைந்திருப்பாள் ......!