ஏமாற்றம்


என்னவளே!..
எல்லாம் இருந்தும்
எதற்கும் இயலாதவனாய் நான்,
எனை நீ
ஏற்காமலே சென்றதினால்...

அன்பே அன்று,
கண்களால் பேசினாய் நீ..
கவிதையாய் கசிந்தாய் நீ..
உயிராய் உருகினாய் நீ..
உள்ளத்தால் பருகினாய் நீ..

இன்றோ,
குடும்பத்திற்காக குருடனாக்கினாய் எனை
ஊருக்காக ஊமையாக்கினாய் எனை
இறுதியில்,
பிறருக்காக நடை
பிணமாக்கினாயேப் பெண்ணே
நாம் கொண்ட காதலை
கொன்றுவிட்டு ???...

‍‍‍ ‍ குட்டி

எழுதியவர் : (20-Feb-11, 10:30 am)
சேர்த்தது : jairam811
பார்வை : 994

மேலே